சுப்பையா தெருவில் புஷ்கலையுடன் வரும் மற்றவர்களுக்கு சாதாரண பெண் போல தெரியும் பெண் பேயாக மாறி காற்றில் கலந்து என் உடம்பில் வேகமாக மோதி தாக்குதல் நடத்துவது போல் கனவு காட்சி கண்டேன். உதவிக்கு பாலாவை கூப்பிட முயற்சி செய்தேன், அதற்குள் தாக்குதல் நடந்தேறியது.
இன்று காலை பெத்தனாச்சி என்னிடம் வருமானம் குறைவாக இருப்பதால் எனக்கு சென்னையில் பேக்கரி ஒன்றில் வேலை கேட்டுக்கொண்டிருப்பதாக சொல்லி என்னிடம் சண்டை போட்டாள்.
ஆனால் நேற்றுதான் பாலா வசம் கம்ப்யூட்டர், லேப்டாப் சர்வீஸ் செய்து பணம் சம்பாதிப்பது பற்றி பேசியுள்ளேன். அதற்குள் பெத்தனாச்சி சண்டை போடுகிறாள்.
கனவிற்கும், நிஜத்திற்கும் சுமார் 90 சதவீதம் விபரங்கள் ஒத்துப் போவதால் கனவின் மூலம் எதிர்வரும் நிகழ்வுகளை சிறிது புரிந்துகொள்ள முடிகிறது என தொன்றுகிறது.