புதன், 5 ஜூன், 2019

03-06-2019 கனவின் விளக்கங்கள்

நேற்று முன்தினம் 3-6-19 திங்கள் கிழமை நடு இரவில் நான் பார்த்த கனவு இன்று காலை நிஜத்தில் நடந்தாக உணர்கிறேன்.

சுப்பையா தெருவில் புஷ்கலையுடன் வரும் மற்றவர்களுக்கு சாதாரண பெண் போல தெரியும் பெண் பேயாக மாறி காற்றில் கலந்து என் உடம்பில் வேகமாக மோதி தாக்குதல் நடத்துவது போல் கனவு காட்சி கண்டேன். உதவிக்கு பாலாவை கூப்பிட முயற்சி செய்தேன், அதற்குள் தாக்குதல் நடந்தேறியது.

இன்று காலை பெத்தனாச்சி என்னிடம் வருமானம் குறைவாக இருப்பதால் எனக்கு சென்னையில் பேக்கரி ஒன்றில் வேலை கேட்டுக்கொண்டிருப்பதாக சொல்லி என்னிடம் சண்டை போட்டாள்.

ஆனால் நேற்றுதான் பாலா வசம் கம்ப்யூட்டர், லேப்டாப் சர்வீஸ் செய்து பணம் சம்பாதிப்பது பற்றி பேசியுள்ளேன். அதற்குள் பெத்தனாச்சி சண்டை போடுகிறாள்.

கனவிற்கும், நிஜத்திற்கும்  சுமார் 90 சதவீதம் விபரங்கள் ஒத்துப் போவதால் கனவின் மூலம் எதிர்வரும் நிகழ்வுகளை சிறிது புரிந்துகொள்ள முடிகிறது என தொன்றுகிறது.

திங்கள், 3 ஜூன், 2019

03-06-2019 கனவு

நடு இரவு சுமார் 2.15 மணி கனவு.

நான் சுப்பையா தெருவில், கீதன் வீட்டின் கிழக்கு தெருவில் இருக்கிறேன். அப்போது ஒரு சினிமா நடனக்காட்சி அந்த இடத்தில் நடக்கிறது. அதே காட்சி டிவியிலும் தெரிகிறது. ஆச்சரியமாக பார்க்கிறேன். நமது தெருவில் எப்போது சினிமா எடுத்தார்கள் என்று யோசிக்கிறேன். கீதன் வீட்டு கோட்டை சுவரில் பச்சை வண்ணம், அதில் மஞ்சள் வண்ணத்தில் கோடுகள் தெரிகிறது.

அப்போது ஏதோ ஒரு புகை போன்ற பொருள் கீதன் வீட்டிலிருந்து சந்திக்கு கிழக்கில் உள்ள வைரம் மெடிக்கல் அருண் வீட்டிற்குள் வேகமாக ஒரு செகன்டில் சென்றதைப் பார்த்தேன். கோட்டைச் சுவரில் இருந்து சுவர் வழியாகவே சென்றது.

அந்த பெண் பேய் வந்துவிட்டது என கத்தினேன். சத்தம் வரல.  அருகில் சிலரிடம் கீதனை கூப்பிட்டால் அவன் வர இயலாது. பாலாவை கூப்பிடுங்கள் அவனுக்கு அந்த பேய் கட்டுப்படும் என்றேன்.

மாதவ மூர்த்தி டாக்டர் வீட்டு முக்கில் நின்று பாலாவின் பெரியம்மா வீட்டை நோக்கி பாலா என கத்தினேன். சத்தம் வரல.

அதற்குள் உடன் இருந்தவர்கள் அந்தப்பக்கம் எதுவும் இல்லை, ஒரு பெண் இரு சிறுமிகளும் பேசிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றனர்.

உங்களுக்கு சரியாய் தெரியல. பெண் பேய் வருகிறது என்றேன். நான் சென்று பார்த்தேன், அதற்குள் சந்திலிருந்து 3 நபர் திரும்பினர். புஷ்கலை ஒருபக்கம், இன்னொரு சிறுமி மறுபக்கம் நடுவில் ஒரு பெண் சாதாரணமாக இருந்தனர்.

நடுவில் இருந்த பெண் என்னைப் பார்த்ததும் கண்களை நன்கு விரித்து என்னை கோபத்துடன் பார்த்து முறைத்தாள். உடனே நான் விடமாட்டேன் என்று மெல்ல சொல்லி முடிப்பதற்குள் காற்றாக மாறி என் உடம்பில் வேகமாக மோதினாள்,